Latest News

நினைவோவியம்


நினைவோவியம்


என்னைச் சுருட்டி 
எனக்குள் நானானது சிறு புழு.

அச்சிறு புழுவுக்கு
இரையாக
என்னைக் கொடுத்தேன்.
இரவையும், பகலையும்
பழகிடக் கொடுத்தேன்.

சிறகு முளைத்த புழு
பலவர்ணம் போர்த்திப் 
பறக்கின்றது.

இப்போது
என்னைத் தேடுகின்றேன்….

சுருட்டப்பட்டவனை
காற்று திறக்கின்றது.

எண்ணற்ற துளைகள் என்னில்

ஒவ்வொரு துளையிலும்
ஓராயிரம் நினைவுகளை
ஓவியமாக்கியிருக்கின்றது புழு


க.டணிஸ்கரன்

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.