Latest News

தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு!– மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்ளை மீறிச் செயற்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது சட்டங்களை மீறிச்n செயற்பட்ட மற்றும் வன்முறைகளில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையாளரிடம் கோரியிருந்தன.
இந்தக் கோரிக்கைகளுக்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தேர்தல் காலத்தில் செய்யப்பட்ட முறைப்பாடுகளை ஆராயும் பணிகள் முதலில் மேற்கொள்ளப்பட உள்ளது.
முறைப்பாடு செய்த பிரதிநிதிகள் நிறுவனங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்த தேர்தல் ஆணையாளர் திட்டமிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.