Latest News

ஜனாதிபதி செயலகத்தினால் போலியான வாக்குசீட்டுக்களை செலுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது!- ஹர்சா குற்றச்சாட்டு

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது போலியான வாக்குசீட்டுக்களை செலுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி குறித்து இடைக்கால
அரசாங்கத்தின் அமைச்சர் ஹர்ச டி சில்வா தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்த வாக்குச்சீட்டுக்களை வாக்குப்பெட்டிகளில் செலுத்துவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு பணமும் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள 1053 வாக்குச் சாவடிகளில் உள்ள அதிகாரிகள் இவ்வாறான வாக்குசீட்டுக்கiளை வாக்குப் பெட்டிகளுக்குள் செலுத்தும் வகையில் தேர்தல் அதிகாரிகள் அதில் கையொப்பங்களை இட்டுள்ளனர்.
இந்த வாக்குச்சீட்டுக்கள் தேர்தலுக்கு முன்னரான 48 மணித்தியாலங்களுக்குள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதற்கு ஜனாதிபதி செயலகமே முழுமையான நிதிப்பங்களிப்பை செய்துள்ளதாக ஹர்சா குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் இது குறித்து தாம் லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.