Latest News

வட, கிழக்கு பகுதிகளுக்கு இராணுவ உபகரணங்களை கொண்டு செல்ல தடை

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இராணுவ தளபாடங்கள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் சிலவற்றை எடுத்துச் செல்வதற்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற முதலாவது பாதுகாப்புச் சபைக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறியவருகிறது.
இதன்படி யுத்த உபகரணங்கள், வெடி மருந்துகள், இராணுவத்தினரின் சீருடைகளை ஒத்த ஆடைகள், தொலைகாட்டி போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
இதேவேளை வட,கிழக்கு பகுதிக்கு கொண்டு செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்த சில பொருட்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.