நெல்லை: தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலம், குமரியில் வசித்து வரும் அகதியான மாணவி தினுசியா இன்ஜினியரிங் படிக்க உதவியுள்ளார் நடிகர் சூர்யா. குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஈழத்து அகதிகள் முகாமில் வசிக்கும் செல்வி தினுசியா பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் கலந்து கொண்டார். அதில், தினுசியாவிற்கு நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. அக்கல்லூரியில் தமிழ் உணர்வாளர்கள் ரூபாய் 25,000 பணம் கட்டி தினுசியாவை சேர்த்தனர். ஆனால் அதற்கு மறுநாளே நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் இருந்து தினுசியாவிற்கு அழைப்பு வந்தது. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலையில் பொறியியல் படிக்க இடம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் நான்கு ஆண்டுகள் படிப்பிற்க்கான செலவையும் உணவு மற்றும் விடுதிக்கான செலவையும் அகரமே ஏற்க உள்ளதாக தெரிவித்தனர். அதனால் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தினுசியா கட்டிய பணம் திருப்பிக் கேட்க பணத்தை கல்லூரி நிறுவனம் திரும்ப அளித்தது.அந்த பணத்தை அகதிகள் முகாமில் உள்ள மற்ற மாணவர்களின் கல்லூரி சேர்க்கைக்கு பயன்படுத்துவதாக மார்த்தாண்டம் அகதிகள் முகாமின் தலைவர் பிரேம்கூறினார். ஈழத்தில் இருந்து வந்து அகதிகள் முகாமில் இத்தனை ஆண்டுகள் காலத்தை கழித்த தினுசியாவிற்கு இனி புதிய அனுபவம் சென்னையில் காத்துக் கொண்டிருக்கிறது. அகதிகள் முகாமில் இருந்து எஸ்.ஆர்.எம் பல்கலையில் இடம் பிடித்த ஒரே மாணவிசெல்வி தினுசியா தான் என்பது மற்றுமொரு பெருமையான தகவல். தக்க தருணத்தில் உதவிக் கரம் நீட்டி மாணவியின் வாழ்கையில் ஒளியேற்றிய அகரம் அறக்கட்டளைக்கும் அதன் நிறுவனர் நடிகர் சூர்யாவுக்கும் ஈழத்து அகதிகள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
Find Us On Facebook
Popular Post
-
புதுமைவாணன் எனும் புனைபெயரிலேயே கவிதைகள்சிறுகதைகள் எழுதி வரும் பாண்டிருப்பை சொந்த இடமாகக் கொண்ட கந்தசாமி டணிஸ்கரன்
-
பாண்டிருப்பு காந்திஜீ விளையாட்டு கழகமும் கல்முனை சுவாட் நிறுவனமும் இணைந்து நடாத்தும் மாபெரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம...
-
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்றும் தொடர்ந்து இரண்டாவது நாளாக மாபெரும் கவனமீரிப்பு போராட்டத்தில் காணமல் போனோரின்...
-
பாண்டிருப்பு கடற்கரை சிவன் ஆலய முத்துச்சப்புற உலா வருதல் நிகழ்வு இன்று மாலை 5.00 மணியளவில் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.இந்த்நிகழ்வை நேரடி நி...
-
கல்முனையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு சென்ற முச்சக்கர
-
நினைவோவியம் என்னைச் சுருட்டி எனக்குள் நானானது சிறு புழு. அச்சிறு புழுவுக்கு இரையாக என்னைக் கொடுத்தேன். இரவையும், பகல...
-
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு யாரும் குரல் கொடுக்காத நிலையில் கல்முனை மாணவ மீட்பு பேரவையி...
-
சுதந்திர தினத்தை முன்னிட்டு சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு 1A,பாண்டிருப்பு 1C,பாண்டிருப்பு 1B,பாண்டிருப்பு 1 ஆகிய ...
-
பாண்டிருப்பு கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆசணங்கள் சில விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இரவு வேளைகளின் சிலர் இந்த இடத்தில் மத...
-
நவீன காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையுமே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது ஸ்மார்ட் போன்கள்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment