ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைப்பது குறித்து கவனம்?
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்குமாறு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தரப்பில், தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணிகள், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளின் மாவட்டச் செயலாளர்களை தேர்தல் ஆணையாளர் சந்திக்க உள்ளார்.
எனினும், தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விரும்பவில்லை.
பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவா்களுக்கு வாக்குச் சீட்டுக்களை வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் ஒத்தி வைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித உறுதியான தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

No comments:
Post a Comment