Latest News

வடமராட்சி கடலில் கரையொதுங்கிய மர்மப்பொருள்

வடமராட்சி கிழக்கு, உடுத்துறை கடற்பரப்பில் இன்று காலை மஞ்சள் நிறத்திலான மர்மப் பொருளொன்று கரையொதுங்கியுள்ளது.
இதனை அவதானித்த பலர் பதற்றத்துடனும் பரபரப்புடனும் காணப்பட்டனர்.
இதனையடுத்த அப்பகுதியில் பொதுமக்கள் கூடி அதனை வேடிக்கை பார்ததனர்.
அத்துடன் இதுகுறித்து பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, அங்கு வந்த அவர்கள் அந்தப் பொருளை பார்வையிட்டு சென்றனர்.
குறித்த பொருள் சர்வதேச கடல் எல்லைகளை அடையாளமிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் மிதவையென தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.