Latest News

மஹிந்தவின் தங்காலை வீட்டில் சோதனை! நீதிமன்ற உத்தரவின்பேரில் பொலிசார் நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தங்காலை வீட்டில் பொலிசார் இன்று சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.
தங்காலையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லமான கார்ல்டன் மாளிகையில் விலையுயர்ந்த கார்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்திருந்தது.
இதனையடுத்து தங்காலை மற்றும் கொழும்பு நீதிமன்றங்களின் மூலம் கார்ல்டன் மாளிகையில் சோதனையிடுவதற்கான உத்தரவைப் பொலிசார் பெற்றுக் கொண்டிருந்தனர்.
எனினும் குறித்த சோதனை நடவடிக்கையின் போது எதுவித வாகனங்களும் கைப்பற்றப்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

wapapnewsDesigned by :- Niranjan Sha (0777427778) Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.